கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: மையல்

திங்கள், 25 அக்டோபர், 2021

மையல்

காரிருள் ஆழ்த்தும் கழகத்தில்
மேகங்கள் தூவிய பன்னீரில்
கனப்பொழுதில் காரிகை வந்தாள்...
கருநீலப் பொட்டிட்ட விழிகள்
செந்தாமரைச் சாயல் செவ்விதழ்
மானிடம் மயக்கும் மையல்
மங்கையெனப் படைத்திட்ட மாயவள்...
மாறனின் மலர்க் கணைகளை
வெல்லத் துடித்த யென்னை
வெற்றுப் புன்னகையில் வீழ்த்திட்டாள்....
மெல்லத் தீண்டிய தென்றலால் 
மையல் கொண்டேன் அவளிடம்....
                                நா.மணிகண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக