மேகங்கள் தூவிய பன்னீரில்
கனப்பொழுதில் காரிகை வந்தாள்...
கருநீலப் பொட்டிட்ட விழிகள்
செந்தாமரைச் சாயல் செவ்விதழ்
மானிடம் மயக்கும் மையல்
மங்கையெனப் படைத்திட்ட மாயவள்...
மாறனின் மலர்க் கணைகளை
வெல்லத் துடித்த யென்னை
வெற்றுப் புன்னகையில் வீழ்த்திட்டாள்....
மெல்லத் தீண்டிய தென்றலால்
மையல் கொண்டேன் அவளிடம்....
நா.மணிகண்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக