கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: காதல் கிறுக்கல்

திங்கள், 12 ஜூலை, 2021

காதல் கிறுக்கல்

நான்முகன் தீட்டிய நல்லோவியம்
புவியில் நடமாடக் கண்டேன்...
வானத்துக் கதிரவன் கதறுகிறான்!
அவளைக்காண விழிகள் போதவில்லையாம்!!
மறுபுறம் வெண்பனி ஆடைபோர்த்த
இந்திரலோக அரம்பையை விஞ்சிய
பேரழகு!!!!!!
அவளைக் கண்டதும் தூரத்தில்
மறைந்து கொண்ட வெண்ணிலவை
மீட்டுவர பரித்தேரேறி புறப்பட்டேன்....
என்னவள் விழிகள் கட்டளையிட்டதால்....
                        -நா.மணிகண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக