கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: அவளுக்காக

சனி, 5 மார்ச், 2022

அவளுக்காக

தங்கச்சிலையென மின்னுந் தாரிகை
மாயமங்கையென வந்த தேவதை
வசந்தம்போ லொருவாய வள்மொழிய
புள்ளினமென எம்மனஞ் சிறகடிக்க
ஏதுமறியா ஏதிலி நானாக
அவள்மீ துண்டான மையலால்
கவிவடிக்கப் பாவொன்று தேடி
கட்டுக்கட்டாய் காகிதந் தொடுத்து
கார்முகில் வண்ணக்கவி படைத்தேன்...
வர்ணனைகள் போதவில்லை வஞ்சியவள்
கண்ணுக்கும் கன்னக் குழிகட்கும்...
கவிவேந்தன் கம்பன் கொண்ட
கல்லறைத்துயில் கலைக்க வேண்டும்போல 
இவளுக்கென்றொர் கவி வடிக்க....
                           -நா.மணிகண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக